Archives: ஜூன் 2020

நம்மைக் குறித்து தாழ்வாக மதிப்பிடல்

ஓர் இளைஞன், அவனுடைய விளையாட்டு குழுவின் தலைவனானான். விளையாட்டை தன்னுடைய தொழிலாகக் கொண்டிருந்த இக்குழு, முகச்சவரம் கூட செய்யத்தேவையில்லாத, சிறிதளவே பண்பட்ட இளைஞனால் வழி நடத்தப்படுகின்றது. அவன் முதல் முறையாகப் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்த போது, அது வரவேற்கத்தகுந்ததாக இல்லை. அவன் தன்னுடைய பயிற்சியாளரைச் சந்திப்பதையும், தன்னுடைய குழுவினரைச்       சந்திப்பதையும் தள்ளிப் போட்டான், கருத்துக் கணிப்புகளைக் கூறுவதற்கு தயங்கினான்,  தன்னுடைய வேலையைச் செய்யும் போது முணுமுணுத்தான்.அந்த நாட்களில் அவனுடைய குழு பின்னடைதலைச் சந்தித்தது, கடைசியில் அந்த இளைஞன் விளையாட்டை வியாபாரமாக்கினான். அவன் தன்னுடைய குழுவை வழி நடத்தக்கூடிய அதிகாரம் தனக்கு இருக்கிறது என்பதையே    புரிந்துகொள்ளவில்லை அல்லது அவன் தன்னால் முடியும் என்பதை நம்பவில்லை.

தன்னுடைய வாழ்வில் தோல்விகளைச் சந்தித்த சவுல், “தன்னுடைய கண்களுக்கு மிகவும் சிறியவனாக” ( 1 சாமு. 15:17) காணப்பட்டான். தன்னுடைய கூட்டத்தினர் அனைவரையும் காட்டிலும் மிக உயரமானவன் என்று வர்ணிக்கப்படும் ஒருவன் இப்படிச் சொல்வது வேடிக்கையாக உள்ளது. எல்லா ஜனங்களும் அவனுடைய தோளுக்குக் கீழாயிருந்தார்கள் (9:2). ஆனால், அவனோ தன்னை அவ்வாறு பார்க்கவில்லை. தனக்கு கீழேயுள்ள ஜனங்களின் சொற்படி நடப்பவனாக காணப்படுகின்றான் என்பதை இந்த அதிகாரத்தில் காண்கின்றோம். ஜனங்களல்ல, தேவன் அவனுக்கு   இந்த பணியைக் கொடுத்தார் என்பதை அவன் புரிந்து கொள்ளவில்லை.

 ஒவ்வொரு தனி மனிதனுடைய தோல்விக்கும் காரணமென்ன என்பதை சவுலின் இக்காரியம் காட்டுகின்றது. நாம் தேவனுடைய சாயலில், அவருடைய அரசாட்சியை வெளிக்காட்டும்படி உருவாக்கப் பட்டோம் என்பதைக் காணத்தவறிவிடுகின்றோம், கடைசியில், நம்முடைய அதிகாரத்தை தவறாக பயன் படுத்தி, உலகில் அழிவை கொண்டுவருகின்றவர்களாக இருக்கின்றோம். இதனைச் சரிசெய்ய நாம்தேவனிடத்திற்குத் திரும்புவோம், நம்முடைய பிதா தமது அன்பினால் நம்மை மாற்றுவார், அவர் நம்மை தமது ஆவியினால் நிரப்புவார், இயேசு நம்மை இவ்வுலகினுள் நடத்துவார்.

நித்திய கண்கள்

நித்திய கண்களை என்னுடைய குழந்தைகளுக்கும் என்னுடைய பேரக் குழந்தைகளுக்கும் தாரும் என்பதாக என்னுடைய சிநேகிதி மரியா ஜெபித்தாள். அவளுடைய குடும்பம் ஒரு கொந்தளிப்புக்குள் கிடந்து தத்தளித்தது, கடைசியில் தன்னுடைய மகளை இழந்தாள்.  இந்த பயங்கரமான இழப்பினால் வருத்தத்தில் இக்குடும்பம் இருக்கும் போது, மரியா  அக்குடும்பத்தினரை குறுகிய பார்வைக்குள் இழுத்துச் சென்றாள், இவ்வுலகின் வேதனையால் அவர்கள் ஆட்கொள்ளப்பட்டனர். நம்முடைய பார்வை தூரத்திற்குச் செல்லும் போது தான், நம்முடைய அன்பின் தேவன் தரும் நம்பிக்கையால் நிரப்பப் படுவோம்.

அப்போஸ்தலனாகிய பவுலும் அவனோடு ஊழியம் செய்தவர்களும் எதிர்ப்பாளர்களாலும், அவர்களின் பெயரைக் கெடுக்க எண்ணிய விசுவாசிகளாலும் அநேக துன்பங்களைச் சகித்தனர். ஆனாலும், அவர்கள் தங்கள் கண்களை நித்தியத்திற்கு நேராக வைத்திருந்தனர். பவுல், “காணப்படுகிறவைகளையல்ல, காணப்படாதவைகளை நோக்கியிருக்கிற நமக்கு அதிசீக்கிரத்தில் நீங்கும் இந்த இலேசான உபத்திரவம்……… ஏனெனில் காணப்படுகிறவைகள் அநித்தியமானவைகள், காணப்படாதவைகளோ  நித்தியமானவைகள்” (2 கொரி.4:17-18) என தைரியமாகச் சொல்கின்றார்.

அவர்கள் தேவனுடைய வேலையைச் செய்தாலும், உண்மையில் அவர்கள் “எப்பக்கத்திலும் நெருக்கப்பட்டனர்”, “கலக்கமடைந்தனர்”, “துன்பப்படுத்தப்பட்டனர்”, “கீழே தள்ளப்பட்டனர்” (வ.8-9). தேவன் அவர்களை, இத்தனை துன்பங்களில் இருந்து விடுவித்திருக்கக் கூடாதா? ஆனால், அவர்கள் ஏமாற்றம் அடைந்து, சோர்ந்துபோகவில்லை. பவுல் தன்னுடைய நம்பிக்கையை, சீக்கிரத்தில் நீங்கும் இந்த உபத்திரத்தையும் தாண்டி “நித்திய மகிமையின்” (வ.17) மீது வைத்திருந்தார். தேவனுடைய வல்லமை அவருக்குள் கிரியை செய்ததை பவுல் உணர்ந்திருந்தார். “கர்த்தராகிய இயேசுவை எழுப்பினவர் எங்களையும் இயேசுவைக் கொண்டு எழுப்புவார்” (வ.14) என்ற உறுதியைப் பெற்றிருந்தார்.

நம்மைச் சுற்றியுள்ள உலகம் நிலையற்றதாக காணப்பட்டாலும், நாம் நம்முடைய கண்களை, அழிவில்லாத நித்திய கன்மலையாகிய  தேவனுக்கு நேராகத் திருப்புவோம்.

2டி இருக்கையில் இருந்த மனிதன்

பிரீத்தி தன்னுடைய 11 மாத குழந்தை லில்லியோடும், லில்லியின் ஆக்ஸிஜன் கருவியோடும் விமானத்தினுள்ளே, நடுப் பாதையில் சென்று கொண்டிருந்தாள். அவள் தன்னுடைய குழந்தையின்  நுரையீரல் சம்மந்தமான நோய்க்கு மருத்துவ சிகிச்சையளிக்க  சென்று கொண்டிருந்தனர். அவள் தனது இருக்கையில் அமர்ந்த சிறிது நேரத்தில், விமான பணியாளர் பிரீத்தியை அணுகி, முதல் வகுப்பில் இருக்கும் ஒரு பிரயாணி, தன்னுடைய இருக்கையை அவளுடைய இருக்கைக்கு மாற்றிக் கொள்ள விரும்புவதாகத் தெரிவித்தார். நன்றியறிதலோடு, கண்ணீர் முகத்தில் வழிய, பிரீத்தி இன்னும் அதிக வசதிகள் கொண்ட ஒரு இருக்கைக்கு நடந்து சென்றாள், அவளுக்கு உதவிசெய்த அந்த அந்நியன் அவளுடைய இருக்கைக்கு வந்தான்.

தீமோத்தேயுவுக்கு, பவுல் எழுதின கடிதத்தில், பவுல் குறிப்பிட்டுள்ள தாராள குணத்தை பிரீத்திக்கு உதவியவர் காட்டினார். தீமோத்தேயுவின் பாதுகாப்பில் இருப்பவர்களுக்கு பவுல், “நன்மைசெய்யவும், நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாகவும், தாராளமாய்க் கொடுக்கிறவர்களும், உதாரகுணமுள்ளவர்களுமாயிருக்கவும்” (1 தீமோ.6:18) கட்டளையிடு என்று எழுதுகின்றார். நீங்கள் கடுமையானவர்களும், உங்கள் நம்பிக்கையை இவ்வுலகத்தின் செல்வத்தின் மேல் வைப்பவர்களுமாக இருங்கள் என்று பவுல் கூறமாட்டாரா என்பது எதிர்பார்ப்பு. ஆனால், அவரோ தாராள குணமுடைய ஒரு வாழ்வையும், பிறருக்குப் பணிசெய்வதையுமே முக்கியப் படுத்துகின்றார். கெல்சி விமானத்தின், 2டி  இருக்கையிலிருந்த அந்த மனிதனைப் போன்று, நற்கிரியைகளில் ஐசுவரியவான்களாயிருங்கள் என்கின்றார்.

நாம் மிக செழிப்பாக இருக்கின்றோமா அல்லது தேவையில் இருக்கின்றோமா என்பதல்ல, நாம் நம்மிடம் உள்ளவற்றை, மற்றவர்களோடு தாராளமாகப் பகிர்ந்து கொள்வதில் ஐசுவரியவானாக இருக்கின்றோமா என்பதே முக்கியம். நாம் அப்படி செய்யும் போது, பவுல் சொல்வதைப் போன்று, நாமும், “நித்திய ஜீவனைப் பற்றிக் கொள்ளும்படி” (வ.19) செயல்படுகின்றவர்களாக இருப்போம்.

தேவன் அங்கே இருக்கின்றாரா?

லீலா புற்று நோயால் பாதிக்கப் பட்டு, மரித்துக் கொண்டிருந்தாள். ஓர் அன்பான தேவன், ஏன் தன்னுடைய மனைவி இத்தனை கஷ்டங்களையும் அநுபவிக்கும்படி விட்டார் என்பதை அவளுடைய கணவன் தீமோத்தியால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவள் வேதாகம ஆசிரியையாக இருந்து கிறிஸ்துவுக்காக உண்மையாய் பணிபுரிந்தாள், அநேகரை கிறிஸ்துவுக்குள் வழி நடத்தினாள். “நீர் ஏன் இதனை அனுமதித்தீர்?” என்று கதறினான். ஆனாலும், தீமோத்தி தேவனோடு கூட நடப்பதில் உண்மையாய் இருந்தான்.

“அப்படியானால் ஏன் நீ இன்னமும் தேவன் மீது நம்பிக்கையோடு இருக்கின்றாய்?”, “அவரை விட்டுத் திரும்பாமல் இருக்க காரணம் என்ன?” என்று நான் அவனிடம் கேட்டேன்.

“ஏனெனில் இதற்கு முன்பு நடந்தவற்றிற்காக” என்று திமோத்தி பதிலளித்தான். இப்பொழுது நான் தேவனைக் “காண” முடியவில்லை, ஆனால், தேவன் அவனைப் பாதுகாத்து, உதவி செய்த நாட்களை அவன் நினைத்துப் பார்த்தான். இன்னமும் தேவன் அவனுடைய குடும்பத்தைப் பாதுகாத்து வருகின்றார் என்பதற்கு இவை அடையாளம், “நான் நம்பியிருக்கின்ற தேவன், அவர் குறித்த நேரத்தில் வருவார்” என்றான்.

திமோத்தியின் வார்த்தைகள், ஏசாயா 8:17 ல் குறிப்பிடப்பட்டுள்ளபடி,  விசுவாசத்தைக் குறித்து ஏசாயாவின் வெளிப்பாட்டை பிரதிபலிக்கின்றது. அவனுடைய ஜனங்கள், எதிரிகளால் வரும் துன்பத்தை எதிர் நோக்கியிருந்த போது, அவனால் தேவனுடைய பிரசன்னத்தை உணர முடியவில்லை, எனினும் அவன் “நானோ கர்த்தருக்காகக் காத்திருந்து, அவருக்கு எதிர்பார்த்திருப்பேன்” என்கின்றார், ஏனெனில், தேவனுடைய பிரசன்னம் அவர்களோடு இருக்கும் என்ற அடையாளத்தை அவர் கொடுத்தபடியால், அவன் தேவன் மேல் நம்பிக்கையோடு  இருந்தான் (வ.18).

சில வேளைகளில் நம்முடைய துன்பங்களின் மத்தியில் தேவன் இல்லையோ என்று நாம் எண்ணும்படியான சந்தர்ப்பங்கள் நேரலாம்.  அப்படிப்பட்ட நேரங்களில், நம்முடைய வாழ்வில், கடந்த நாட்களிலும், தற்சமயமும் அவர் செய்த காரியங்களை நினைத்துப் பார்ப்போம். இவையே, நம்மால் காணக்கூடாத தேவன் செய்த, காணக்கூடிய நினைப்பூட்டிகள். அவர் எப்போதும் நம்மோடிருக்கும் தேவன், அவர் தான் தீர்மானித்திருக்கின்ற நேரத்தில், அவருடைய வழியில் பதிலளிப்பார்.